வெள்ளி

தங்க விதிகள்

" NEVER TRY TO CATCH A FALLING KNIFE " என்ற மேற்கோள் எதற்கு பொருந்தும் என்பதற்கு கடந்த வாரத்தில் SATYAM COMPUTER பங்கினை 60 ரூபாய்க்கு மேல் வாங்கியவர்களிடம் கேட்க வேண்டும். வாங்கியவர்களின் கதி என்ன என்பதை கண்கூட பார்க்கிறோம்.ஒரு நிறுவனத்தின் தலைமை பொறுப்பில் இருப்பவர் தான் பல்வேறு தில்லு முல்லுகளை கணக்கு வழக்குகளில் செய்துள்ளதை ஒப்புக் கொண்ட பிறகும் அப்பங்கினை வாங்குகிறார்கள் என்றால் என்ன சொல்வது?
எப்பொழுதும் நாம் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டியது எப்பங்கு ஒரு விலையில் இருந்து 25 சதவீதத்திற்கு மேல் ஒரே நாளில் இறங்குகிறதோ அப்பங்கை முன்தினம் முடிவடைந்த விலையை எப்பொழுது வாரக்கடைசியில் தக்க வைத்து கொள்கிறதோ அப்பொழுது நீங்கள் வாங்கலாம் இல்லைஎன்றால்
கத்தி நம்மை பதம் பார்த்துவிடும் என்பதை நினைவில் கொள்ளவும்.

1 கருத்து:

ATOZ FOREX DETAILS சொன்னது…

பங்குச் சந்தையில் ஏன் பெரும்பாலோனோர் நஷ்டம் அடைகிறார்கள்? லாபம் பெற வழிகள்.

ஒரு விசயத்தில் ஏன் தோல்வி பெறுகிறோம் அல்லது பெற்றோம் என்பதனை அறிந்தாலே,வெற்றி பெறுவது எளிது. பங்குச் சந்தையில் அனைவரும் எப்படி லாபம் பெறலாம் என்பதில் தான் கவனம் வைக்கிறார்களே ஒலிய, தோல்வி எதனால் வந்தது அல்லது வருகிறது என்பதை அறிய ஒரு பொழுதும் முற்படுவது இல்லை. நாம் இப்பொழுது பங்குச் சந்தையில் பெரும்பாலோனோர் ஏன் நஷ்டம் அடைகிறார்கள் என்பதனைப் பற்றி பார்ப்போம். இதனை தவிர்த்தாலே லாபம் பெறுவது கட்டாயம் தவிர்க்க இயலாத ஒன்றாகி விடும்.

1. தினசரி வணிகம் (intra day trade ) மட்டுமே செய்வதால்.

நாம் எவ்வளவு தான் முன் ஜாக்கிரதையாக வர்த்தகம் செய்தாலும், தினசரி வணிகம் என்பது நிச்சயமாக பணத்தை இழக்கும் காரணிகளில் மிக மிக முக்கியமான ஒன்றாகும். பங்குச் சந்தைக்கு ஊக வணிகம் என்ற பெயரும் உண்டு. ஊகம் என்றால் வரலாம் அல்லது வராமல் போகலாம் என்பதில் ஒன்று தான் பதிலாக இருக்க முடியும். உதாரணமாக இன்று மழை வருமா? சிலர் வரும் என்போம், சிலர் வராது என்போம். ஆனால் முடிவு ஏதாவது ஒன்று தான் இருக்கும். இது தான் ஊகம். இன்று மழை வரும் என்று உங்கள் நண்பரிடம் பெட் கட்டுகிறீர்கள், இந்த வருடத்திற்குள் கட்டாயம் மழை வரும் என்று பெட் இரண்டில் எது நடக்க வாய்ப்பு அதிகம். நான் சொல்ல வருவது என்ன வென்றால் பங்குச் சந்தையில் பணம் பண்ணும் அணைத்து நபர்களும், நிறுவனங்களும் ஒருபோதும் தினசரி வணிகம் மட்டும் செய்வது இல்லை. நீங்கள் தினசரி வர்த்தகம் மட்டுமே செய்வபராக இருந்தால் உங்கள் பணத்தை இன்று வேண்டுமானால் இல்லாமல் இருக்கலாம், ஆனால் என்றோ ஒரு நாள் கட்டாயம் இழப்பது உறுதி.
FOR MORE:
http://atozforexdetails.blogspot.in/2014/03/blog-post.html