" NEVER TRY TO CATCH A FALLING KNIFE " என்ற மேற்கோள் எதற்கு பொருந்தும் என்பதற்கு கடந்த வாரத்தில் SATYAM COMPUTER பங்கினை 60 ரூபாய்க்கு மேல் வாங்கியவர்களிடம் கேட்க வேண்டும். வாங்கியவர்களின் கதி என்ன என்பதை கண்கூட பார்க்கிறோம்.ஒரு நிறுவனத்தின் தலைமை பொறுப்பில் இருப்பவர் தான் பல்வேறு தில்லு முல்லுகளை கணக்கு வழக்குகளில் செய்துள்ளதை ஒப்புக் கொண்ட பிறகும் அப்பங்கினை வாங்குகிறார்கள் என்றால் என்ன சொல்வது?
எப்பொழுதும் நாம் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டியது எப்பங்கு ஒரு விலையில் இருந்து 25 சதவீதத்திற்கு மேல் ஒரே நாளில் இறங்குகிறதோ அப்பங்கை முன்தினம் முடிவடைந்த விலையை எப்பொழுது வாரக்கடைசியில் தக்க வைத்து கொள்கிறதோ அப்பொழுது நீங்கள் வாங்கலாம் இல்லைஎன்றால்
கத்தி நம்மை பதம் பார்த்துவிடும் என்பதை நினைவில் கொள்ளவும்.
தங்க விதிகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தங்க விதிகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வெள்ளி
திங்கள்
தங்க விதி 4
*'லாபத்தை வெளியே எடுங்கள் '*
* Withdraw a portion of your profits*
சனி
தங்க விதி 3
* சந்தை செல்லும் திசையில் வணிகம் செய்யவும் *
* TRADE WITH THE TREND *
பொதுவாக சற்று தின வணிகம் செய்ய பழகியதும் நாம் செய்யும் முக்கிய தவறு, முதல் நிலை பங்குகள் சற்று ஏற்றம் பெற்றவுடன் அவற்றை எதிர் திசையில் வணிகம் செய்வது தான். பொதுவாக NIFTY ல் இடம் பெற்றுள்ள முக்கிய பங்குகள் அவற்றின் நிலை எவ்வாறு பயணிக்கிறதோ அவ்வாறே அன்றைய தின வணிகம் இருக்கும், இதற்கு எதிராக நாம் செய்யும் வணிகம் நஷ்டத்தில் முடிவடையும் வாய்ப்புள்ளது எனலாம். அன்றைய நிலை ஏறுமுகமாக இருந்தால் வாங்கி விற்பனை செய்ய வேண்டும், இதற்கு எதிராக இவ்வளவு ஏறிவிட்டது இனி இறங்கும் என்று ஒவ்வொரு ஏற்றத்தில் விற்றுக் கொண்டிருந்தால் நமது முதலீட்டை இழக்க நேரிடும். எனவே சந்தையின் திசையில் வணிகம் செய்வது முக்கியமான ஒன்றாகும்.
புதன்
தங்க விதி - 2
* எப்பொழுதும் லாபத்தை நஷ்டமாக விடாதீர்கள் *
* Never let a profit turn into a loss *
நீங்கள் வாங்கியிருக்கும் பங்குகள் லாபத்தை கொடுத்தால் அதை பெற்றுக்கொண்டு உங்கள் வசமாக்குங்கள். ஒரு பங்கின் விலை ஏறிக்கொண்டே இருக்கும் என்ற எண்ணத்தை விட்டொழியுங்கள் ,ஏன்னென்றால் விலைகள் எப்பொழுதும் ஏற்ற இறக்கங்களை சந்தித்து கொண்டேதான் இருக்கும். பொதுவாக நீங்கள் எங்கு முதலீடு செய்திருந்தாலும் அப்பணம் சிறுக சிறுக தான் வளரும், பங்கு சந்தையில் மட்டும் இன்று முதலீடு செய்தல் நாளை இரட்டிப்பு ஆகும் என்றே பலர் எண்ணுவதால் ஏமாற்றம் அடைகின்றனர்.
முதலீடு செய்துள்ள பணத்திற்கு உண்டான மதிப்பு கண்டிப்பாக கிடைக்கும். சிறு துளி பெரு வெள்ளம் என்பதை போல சிறு சிறு லாபங்களை ஈட்டி கொண்டே சென்றால் கண்டிப்பாக பின்னாளில் அது மிக பெரிய செல்வமாக மாறும். ஆகவே எபொழுதும் லாபத்தை நஷ்டமாக விடாதீர்கள்.
திங்கள்
தங்க விதி 1
உங்கள் முதலீட்டை பத்து பாகங்களாக பிரித்து கொள்ளவும் .
(Divide your trading capital into ten equal risk segments)
நீங்கள் முதலீடு செய்யும் மொத்த பணத்தை பத்து பாகமாக பிரித்து கொள்ளவும் , அவற்றை ஒரே துறையில் முதலீடு செய்யாமல் மிக அதிக அளவில் ஏற்றம் பெறக்கூடிய முக்கிய துறைகளில் முதலீடு செய்யலாம். அவ்வாறு தேர்தெடுக்கும் பங்குகளில் அதிக அளவில் வாணிபம் நடைபெறக்கூடிய முதல் இரண்டு பங்குகளில் மட்டும் முதலீடு செய்யலாம்.
நீங்கள் தேர்தெடுக்கும் துறைகளின் நீங்கள் கவனிக்க வேண்டிய முக்கிய குறிப்புகள், அதன் எதிர்கால வளர்ச்சி, அரசாங்கம் ஏற்படுத்தும் புதிய கொள்கைகள், சந்தையில் அதன் தாக்கம், சென்ற வருடத்தின் லாபம், அந்த கம்பெனியின் எதிர்கால விரிவாக்க திட்டங்கள் ஆகியவற்றை மிக முக்கியமாக கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு முதலீடு செய்யும் பொழுது ஏதாவது துறை சுணக்கம் கண்டாலும் மற்ற பங்குகளில் முதலீட்டை திரும்ப பெற்றுவிடலாம்.
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)