புதன்

தங்க விதி - 2


* எப்பொழுதும் லாபத்தை நஷ்டமாக விடாதீர்கள் *
* Never let a profit turn into a loss *

நீங்கள் வாங்கியிருக்கும் பங்குகள் லாபத்தை கொடுத்தால் அதை பெற்றுக்கொண்டு உங்கள் வசமாக்குங்கள். ஒரு பங்கின் விலை ஏறிக்கொண்டே இருக்கும் என்ற எண்ணத்தை விட்டொழியுங்கள் ,ஏன்னென்றால் விலைகள் எப்பொழுதும் ஏற்ற இறக்கங்களை சந்தித்து கொண்டேதான் இருக்கும். பொதுவாக நீங்கள் எங்கு முதலீடு செய்திருந்தாலும் அப்பணம் சிறுக சிறுக தான் வளரும், பங்கு சந்தையில் மட்டும் இன்று முதலீடு செய்தல் நாளை இரட்டிப்பு ஆகும் என்றே பலர் எண்ணுவதால் ஏமாற்றம் அடைகின்றனர்.
முதலீடு செய்துள்ள பணத்திற்கு உண்டான மதிப்பு கண்டிப்பாக கிடைக்கும். சிறு துளி பெரு வெள்ளம் என்பதை போல சிறு சிறு லாபங்களை ஈட்டி கொண்டே சென்றால் கண்டிப்பாக பின்னாளில் அது மிக பெரிய செல்வமாக மாறும். ஆகவே எபொழுதும் லாபத்தை நஷ்டமாக விடாதீர்கள்.

1 கருத்து:

Unknown சொன்னது…

நல்ல கருத்து நன்ற!!!